அன்பு நண்பா;;தஞ்சாவூர் மாநகர மேம்பாட்டுக்குத் தமிழக முதல்வர் ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் மேயர் சாவித்திரி கோபால்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாநகர மேம்பாட்டுக்காகத் தமிழக முதல்வர் ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதை ஆட்சியர் மாநாட்டிலேயே அறிவித்தார். இதன் மூலம், மாநகரில் புதை சாக்கடைத் திட்டம், குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும்.
மாநகரில் உள்ள 51 வார்டுகள் மட்டுமல்லாமல் புதிய பகுதிகளிலும் இந்த வசதிகள் நிறைவேற்றப்படும். இரண்டாம் கட்ட மேம்பாட்டுப் பணிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றார் சாவித்திரி கோபால்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாநகர மேம்பாட்டுக்காகத் தமிழக முதல்வர் ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதை ஆட்சியர் மாநாட்டிலேயே அறிவித்தார். இதன் மூலம், மாநகரில் புதை சாக்கடைத் திட்டம், குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும்.
மாநகரில் உள்ள 51 வார்டுகள் மட்டுமல்லாமல் புதிய பகுதிகளிலும் இந்த வசதிகள் நிறைவேற்றப்படும். இரண்டாம் கட்ட மேம்பாட்டுப் பணிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றார் சாவித்திரி கோபால்.
No comments:
Post a Comment